Friday, July 31, 2009

புரியாத காதலியே....


கார்மேகம் கலைகையிலே
பூலோகம் வரள்கிறதே
நீ நீங்கிப் போகையிலே
என் இதயம் வாடியதே..!

சோகம் என எண்ணி
சோர்ந்து இருக்கையிலே
மடி தந்து என்னை
தோள் தட்டிக் கொடுத்தாயே..!

காலைஎன்ன மாலைஎன்ன
மனசெல்லாம் நீதானே..
பகை வந்து கொல்லாமல் -உன்
பார்வையிலே கொன்றவள் நீதானடி..

உள்ளத்தை உருக்கி
மனதைக் கொள்ளையிட்டு
தூக்கத்தை வருடிவிட்டு
உயிரை மெல்கிறாய் ஏனடியோ..!

உன்னினைவில் நானிருந்து
என்னை மறக்கையிலே..
உடலங்கள் இரண்டேனும்
உயிரொன்று தானடி....

ஊடலும் கூடலும்
உள்ளதுதான் காதலடி
காதலில் கூடாது.......
என்றும் ஊடலடி..

பிரிந்து வாழும் நிலையிருந்தும்
சட்டைப் பையில் உன் படமே..!
தொடர்பு சாதனம்
துணையிருக்க...
துடித்து வாழ்வது ஏனடியோ..

சினிமா பார்த்த ஞாபகமும்
சிரித்துக் குலுங்கிய பூவனமும்
முத்தமிட்ட கைகளையும்
அள்ளி அணைத்த கூந்தலையும்
நினைத்துப் பார்க்கையிலே
வெந்து போகுதடி என் உள்ளமே..! .

பாசத்தில் அடிமையாகி
நேசத்தால் எனைத் தந்தேன்
வாழ்விற்கு இலக்கணமாய்
கூறிய வார்த்தைகளை
கூறிட்டுப் போனவளே………!

உன்னிடத்தில் சரணடைந்தால்
எனை உடைத்துப் போவாயோ..?
விடை பெற்றுப் போகையிலே
விழியே…எனை நினைப்பாயோ..?

தேசம் கடந்து வந்தேன்
தேம்பி அழுதாயடி...
நிதமும் உன் நினைவுகளால்
நித்திரையைத் தொலைத்தேனடி..

படுக்கையில் புரண்டாலும்
தூக்கம் இல்லையடி
மறக்கத்தான் நினைக்கிறேன்
நினைவெல்லாம் நீதானடி.
வாழ்வது உனக்காகவே
நீயின்றி ஒரு வாழ்வா..?

நட்புடன்
அஜன்
www.priyanga2008.blogspot.com

No comments:

Post a Comment