Saturday, August 1, 2009

முதல் காதல்


வீதியோரம் செல்கையிலே
வீசும் காற்றாய் நீ வந்தாய்
இதயம் தன்னை வருடிவிட்டு
எதையோ புலம்ப வைத்தாயே..

மலர் ஒன்றைக் கிள்ளி
முத்தமிடுகையிலே..
மலருக்கே மலர் இடும்
முத்தம் கண்டு ......
சொர்க்கத்தில் குதித்து
சோகத்தை மறந்தேன்

முதல்.. காதல் கூற
ஓடோடி வந்தேன்
வார்த்தைகள் சிக்கையிலே
வாதிடவா முடியும்..?
ஏதேதோ கூற வந்தேன்
ஏதுமில்லை என்றேன்
உனைப் பார்த்தபோது....

பள்ளி செல்கையிலே
பாதி வழி உன்னோடு
சிரிக்கும் மயில் அழகே ...
கார்மேகக் குழலழகே........!

என்னுள்ளே ஏதேதோ
செய்தவள் நீதானே.....
மறந்தேனே என்னை....
மார்கழியே நீ வரவே..!

பனி விழுந்த பூமுகமே..!
அன்றலர்ந்த தாமரையே..
தனியே உனைக்காண....
தவமிருந்து போனேனே..
என் ஆசை நானுரைக்க....
ஓவியம் வரைகிறது
உன் கால்கள்....
தரையில் நீ உரசையிலே..
தேய்வது என் மனசு தானே...!

செவ்வான முகத்தவளே..!
எந்நாளும் உன் நினைவே..
என் வானில் பறப்பதெல்லாம்
உன் வண்ண ஞாபகமே...!

சிதறிய முத்தழகே ...
கோர்க்கவா கைகளிலே..
தேம்பி அழுகையிலே
தேடிடவா ...கன்னக்குழி..!

தூக்கம் கலைகையிலே..
தோழியவள் நீதானே ..!
நாட்கள் நகர்கிறதே......
நாமேப்போ சேர்வதிங்கே...!

என் காதல் தேவதையே
ஏன் இன்னும் மௌனம்..!
காலமெல்லாம் வசந்தம் தான்
கண்ணே நீ அருகில் வந்தால்...!
ஓடும் நதி போல
ஓடிடுவோம் ஒன்றாக..!

காதலுடன்
இளையகவிஞர்
ஈழமகன்.
www.priyanga2008.blogspot.com

No comments:

Post a Comment